×

கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை பாதயாத்திரை மேற்கொள்ளும் ராகுல் காந்தியின் முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்: ம.ம.க. தலைவர் ஜவாஹிருல்லா

சென்னை: பாத யாத்திரை மேற்கொள்ளும் ராகுல் காந்தியின் முயற்சி வெற்றி பெற மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா வாழ்த்து தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து அவர் தம் ட்விட்டர் பதிவில், கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை 3500 கிலோ மீட்டர் தூரம் 150 நாட்கள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இந்திய ஒற்றுமை பயணம் மேற்கொள்கிறார். இந்தப் பயணத்தை தமிழ்நாட்டு முதலமைச்சர் தளபதி  மு.க. ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைப்பது மிகப் பொருத்தமானது. 150 நாட்களில்  ஒரு கோடி பேரை சந்திக்கும் ராகுல் காந்தி தலைமையில் இந்த பரப்புரை மிகப்பெரிய அளவில் வெற்றி பெற மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

தற்போதைய அரசியல் சூழலில் இந்த அறிய முயற்சி இன்றியமையாத அவசியமான ஒன்று. வேற்றுமையில் ஒற்றுமை காணும் இந்தியாவின் சித்தாந்தத்திற்கு எதிராக செயல்படும் ஒன்றிய அரசை அகற்றுவதற்கு எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கவும் இந்த யாத்திரை பயன்படும் என்று திடமாக நம்புகிறேன். இத்தகைய இக்கட்டான நிலையில் சங் பரிவாரிடமிருந்து  இந்தியா எனும் பெருங்கனவை மீட்டெடுத்து அடுத்த தலைமுறைகளுக்குக் கையளிக்கும் வகையில் இன்று குமரி முனையிலிருந்து “இந்திய ஒற்றுமைப் பயணம்” எனும் ஒரு பெருமுயற்சியை ராகுல் காந்தி முன்னெடுத்துள்ளார் என ஜவாஹிருல்லா குறிப்பிட்டிருக்கிறார்.


Tags : Rahul Gandhi ,Kanyakumari ,Kashmir ,M.M.K. ,President ,Jawahirullah , Kumari, Kashmir, Pathayatra, Rahul Gandhi, Jawahirullah
× RELATED சொல்லிட்டாங்க…