மதுரை: பழங்குடியின பெண்ணுக்கு வழங்கப்பட்ட சாதிச் சான்றிதழை ரத்து செய்த உத்தரவுக்கு மதுரைக்கிளை இடைக்கால தடை விதித்துள்ளது. சாதிச் சான்றிதழை ரத்து செய்ததற்கான காரணம் குறித்து பதில் மனு தாக்கல் செய்ய பழங்குடியினர் துறைக்கு உத்தரவிட்டது. காரைக்குடியை சேர்ந்த ராஜேஸ்வரி(60) என்பவர் தாக்கல் செய்த மனுவில் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்தது.