×

உத்தமபாளையம் அருகே பரபரப்பு அரிவாளால் வெட்டி, டூவீலரை தலையில் தூக்கி போட்டு வாலிபர் கொடூர கொலை-போலீசார் தீவிர விசாரணை

உத்தமபாளையம் : உத்தமபாளையம் அருகே தோட்டத்தில் வாலிபரை அரிவாளால் வெட்டி, டூவீலரை தலையில் தூக்கிப் போட்டு கொலை செய்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே உள்ள நாகையகவுண்டன்பட்டி (எ) அணைப்பட்டியைச் சேர்ந்தவர் யுவராஜ் (29). அங்குள்ள சண்முகா நதி அணை பகுதிக்கு செல்லும் சாலையில் இவரது தோட்டம் உள்ளது. தோட்டத்தில் வாழை விவசாயம் செய்து வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று மதியம் அந்தப் பகுதியில் நடந்து சென்றவர்கள், டூவீலர் விழுந்து ஒருவர் இறந்து கிடப்பதாக ராயப்பன்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து உத்தமபாளையம் உதவி போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரேயா குப்தா தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். போலீசார் விசாரித்ததில், இறந்து கிடந்தவர் யுவராஜ் என்பது தெரியவந்தது. மேலும், தலையில் அரிவாளால் வெட்டி, பின்னர் அவரது டூவீலரை தூக்கி தலையில் போட்டு கொலை செய்தது தெரிய வந்தது.

தேனியில் இருந்து பைரவா மோப்பநாய் வரவழைக்கப்பட்டு கொலை செய்த இடங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது மோப்ப நாய் சண்முகா நதி அணை செல்லும் சாலையில் சிறிது தூரம் ஓடி நின்றது. இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், கொலை செய்த மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். மேலும், எதற்காக யுவராஜ் கொலை செய்யப்பட்டார் என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Tags : Uttampalayam , Uthamapalayam: The mysterious murder of a young man in a garden near Uthamapalayam
× RELATED போடி விரிவாக்க சாலையில் சாலை நடுவே...