×

பெரியாறு பாசனப் பகுதி, திருமங்கலம் பிரதான கால்வாய் நிலங்களுக்கு வைகை அணையில் இருந்து நீர் திறக்க தமிழக அரசு உத்தரவு

சென்னை: பெரியாறு பாசனப் பகுதி திருமங்கலம் பிரதான கால்வாய் நிலங்களுக்கு வைகை அணையில் இருந்து நீர் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்; பெரியாறு பாசனப் பகுதியில் உள்ள ஒரு போக பாசன நிலங்களுக்கும் மற்றும் திருமங்கலம் பிரதானக் கால்வாயின் கீழ் உள்ள ஒரு போக பாசன நிலங்களுக்கும் விநாடிக்கு 1130 கன அடி வீதம் 45 நாட்களுக்கு முழுமையாகவும், 75 நாட்களுக்கு முறைவைத்தும் 07.09.2022 முதல் மொத்தம் 120 நாட்களுக்கு 8461 மி.க.அடி தண்ணீரை வைகை அணையிலிருந்து திறந்துவிட அரசு ஆணையிட்டுள்ளது. இதன்மூலம் திண்டுக்கல், மதுரை மற்றும் சிவகங்கை  மாவட்டங்களில் உள்ள 1,05,002 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் இவ்வாறு குறிப்பிட்டுள்ளது.

Tags : Tamil Nadu Government ,Vaigai Dam ,Periyaru ,Thirumangalam , Tamil Nadu government order to release water from Vaigai Dam to the Thirumangalam main canal lands of Periyar irrigation area
× RELATED வைகை அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் நிறுத்தம்