×

சென்னையில் நேற்று ஒரேநாளில் நோ என்ட்ரியில் வாகனம் ஓட்டிய 1,300 வாகன ஓட்டிகள் மீது வழக்குப்பதிவு.. ரூ.1,100 அபராதம்..!!

சென்னை: சென்னையில் நேற்று ஒரேநாளில் நோ என்ட்ரியில் வாகனம் ஓட்டிய 1,300 வாகன ஓட்டிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, ரூ.1,100 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. ஆபத்தை விளைவிக்கும் பயணத்துக்கு ரூ.1,000 அபராதமும், எதிர்திசையில் வாகனம் ஓட்டினால் ரூ.100 அபராதமும் சேர்ந்து ரூ.1,100 அபராதம் விதிக்கப்படும் என்று காவல்துறை தெரிவித்திருக்கிறது. ஒருவழிப்பாதையில் வாகனம் ஓட்டுவதால் விபத்து ஏற்படுவதை தடுக்க சென்னை போக்குவரத்து காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்கும், விபத்துகளை தடுப்பதற்கும், போக்குவரத்து விதிமீறலை கட்டுப்படுத்துவதற்கும் தொடர்ந்து போக்குவரத்து போலீசார் பல்வேறு சிறப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தவறான பதிவெண்கள் வைத்திருப்பது, நோ என்ட்ரியில் செல்வது, சிக்னலை மதிக்காமல் செல்வது, லைசென்ஸ் இல்லாமல் செல்வது உள்ளிட்ட விவாகரத்திற்கு சிறப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டு வருகின்றன. இந்த அடிப்படையில் நோ என்ட்ரியில் செல்லும் நபர்களுக்கென தனியாக நேற்று சென்னை முழுவதும் போக்குவரத்து போலீசாரால் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டது. பொதுவாக நோ என்ட்ரியில் செல்லும் வாகனங்களுக்கு ரூ.100 அபராதம் விதிக்கப்படும்.

ஆனால் தற்போது நோ என்ட்ரியில் சென்று அதிக விபத்துகள் நேரிடுவதால் தண்டனையை கடுமையாக்கும் நடவடிக்கையாக அபாரதத்தையும் அதிகரித்துள்ளனர். அதன்படி 100 ரூபாயாக இருந்த அபராதம் தற்போது 1,100 ரூபாயாக வசூலிக்கப்படுகிறது. அந்த அடிப்படையில் சென்னையில் நேற்று ஒரேநாளில் நோ என்ட்ரியில் வாகனம் ஓட்டிய 1,300 வாகன ஓட்டிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறை தொடரும் எனவும் சென்னை போக்குவரத்து காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.


Tags : Chennai , Chennai, no entry, vehicle, prosecution, fine
× RELATED சென்னை புதுப்பேட்டையில் ஆன்லைன்...