சென்னை: பள்ளி மாணவ /மாணவியர்கள் அறிவியல், கணிதம் சார்ந்த ஒலிம்பியாய்டு தேர்வுகளுக்குப் பெருமளவில் தயாராகிப் பங்குபெறுவதைப் போன்று தமிழ்மொழி இலக்கியத் திறனை மேம்படுத்திக்கொள்ளும் வகையில் “திறனறித் தேர்வு” அரசு தேர்வுகள் இயக்ககம் வாயிலாக நடைபெறவுள்ளது. 2022-2023ம் கல்வியாண்டில் அரசுப்பள்ளி மற்றும் அனைத்துவகை பள்ளியில் பயிலும் (சி.பி.எஸ்.இ/ஐ.சி.எஸ்.இ) பதினொன்றாம் வகுப்பு மாணவர்கள் / மாணவிகள் இத்தேர்வினை எழுத செப்டம்பர் 9 வரை www.dge.tn.gov.in
இத்தேர்வு கொள்குறி வகையில் நடைபெறும். ஒரு கேள்விக்கு ஒரு மதிப்பெண் வீதம் 100 கேள்விகள் அடங்கிய வினாத்தாள் வழங்கப்படும். இத்தேர்வு அக்டோபர் 1ம் தேதி அன்று முற்பகல் 10.00 - 12.00 வரை நடைபெறும். இத்தேர்விற்கு விண்ணப்பிப்பவர்கள் இத்தேர்வுக்கான நுழைவுச் சீட்டினை மேற்குறிப்பிடப்பட்ட இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் இத்தேர்வில் வெற்றிபெறும் 1500 மாணவ / மாணவியர்களுள் 750 அரசு பள்ளி மாணவர்களும் 750 இதர பள்ளி மாணவர்களுக்கும் திங்கள் ஒன்றுக்கு ரூ.1500/- இரண்டு ஆண்டுகளுக்கு தொகை வழங்கப்படவிருக்கிறது.