பரமத்திவேலூர்: நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் பேருந்து நிலையம் அருகே தனியார் திருமண மண்டப கட்டிட வளாகத்தில் தனியார் வங்கியின் ஏடிஎம் மையம் செயல்பட்டு வருகிறது. நேற்று காலை ஏடிஎம் இயந்திரம் உள்ள அறையில் இருந்து கரும்புகை வந்துள்ளது. தகவலின்பேரில், வேலாயுதம்பாளையம் தீயணைப்பு நிலைய வீரர்கள் சென்று தீயை அணைத்தனர். இரண்டு ஏசி இயந்திரங்களில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக தீப்பிடித்திருப்பது தெரிய வந்தது. ஏடிஎம் மில் இருந்த பணத்துக்கு சேதம் ஏற்படவில்லை.