×

மழையால் பாதித்த நிலங்களை ஆய்வு செய்து உரிய இழப்பீடு: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

சென்னை: மழையால் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களை ஆய்வு செய்து உரிய இழப்பீட்டை உடனே வழங்க வேண்டும் என்று ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார். தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கை: மழையால் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களை ஆய்வு செய்து அவர்கள் பயிர் காப்பீடு செய்திருந்தாலும், செய்யாவிட்டாலும், அவர்கள் அனைவருக்கும் உரிய இழப்பீட்டை தமிழக அரசு உடனே வழங்க வேண்டும். இழப்பீடு உடனே கிடைத்தால் தான் விவசாயிகள் மேலும் பொருளாதார ரீதியாக பாதிக்கப்படாமல், மீண்டும் தாளடி பயிர் செய்ய ஏதுவாக இருக்கும். தற்பொழுது தமிழக அரசு அறிவித்துள்ள ஆதார விலை போதுமானதாக இல்லை.

Tags : GK ,Vasan , Survey of rain-affected lands and appropriate compensation: GK Vasan insists
× RELATED தேர்தல் விதிமீறலில் ஈடுபட்டதாக ஈரோடு...