×

பண்டிகை கால கூட்ட நெரிசலை சமாளிக்க நெல்லை, மதுரை வழியாக செல்லும் ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு

நெல்லை: பண்டிகை கால கூட்ட நெரிசலை சமாளிக்க நெல்லை, மதுரை வழியாக செல்லும் குருவாயூர், அந்தியோதயா மற்றும் கோவை இரவு நேர ரயில்களில் கூடுதல் ரயில் பெட்டிகள் இணைக்கப்பட உள்ளது. அதன்படி சென்னை எழும்பூர் - குருவாயூர் ரயிலில் (16127) நேற்று முதல் வரும் 11ம் தேதி வரையும் குருவாயூர் - சென்னை எழும்பூர் ரயிலில் (16128) வரும் 12ம் ேததி வரையும் ஒரு இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டி, ஒரு இரண்டாம் வகுப்பு பொதுப்பெட்டி ஆகியவை இணைக்கப்பட்டுள்ளது. மேலும் தாம்பரம் - நாகர்கோவில் அந்தியோதயா ரயிலில் (20691) நேற்று முதல் வரும் 12ம் தேதி வரையும், நாகர்கோவில் - தாம்பரம் அந்தியோதயா ரயிலில் (20692) வரும் 7ம் தேதி முதல் 12ம் தேதி வரையும் ஒரு இரண்டாம் வகுப்பு பொதுப்பெட்டி இணைக்கப்படுகிறது.

டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் - நாகர்கோவில் ரயிலில் (12689) வரும் 9ம் தேதியன்று மற்றும் நாகர்கோவில் - டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் ரயிலில் (12690) வரும் 10ம் தேதியன்றும் ஒரு இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டி இணைக்கப்படுகிறது. கோயம்புத்தூர் - நாகர்கோவில் இரவு நேர ரயிலில் (22667) நேற்று தொடங்கி வரும் 10ம் தேதி வரையும், நாகர்கோவில் - கோயம்புத்தூர் இரவு நேர ரயிலில் (22667) வரும் 11ம் தேதி வரையும் ஒரு இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டி இணைக்கப்படுகிறது.


Tags : Nella ,Madurai , Connection of additional coaches in trains passing through Nella and Madurai to deal with the rush during the festive season
× RELATED நெல்லை மக்களவை தொகுதி பாஜ, அதிமுக வேட்பாளர்கள் சொத்து பட்டியல்