×

தாய், மனைவியை ஆபாசமாக பேசியதால் தந்தையின் கழுத்தை அறுத்துவிட்டு போலீசில் கத்தியுடன் மகன் சரண்: அமைந்தகரையில் பரபரப்பு

அண்ணாநகர்; தாய் மற்றும் மனைவியை ஆபாசமாக பேசியதால் தந்தையின் கழுத்தை அறுத்துவிட்டு கத்தியுடன் மகன் காவல்நிலையத்தில் சரணடைந்தார். சென்னை அமைந்தகரை செனாய் நகர் பாரதிபுரம் பகுதியை சேர்ந்தவர் சாகுல்அமீது(57). இவர் தள்ளுவண்டியில் காய்கறி வியாபாரம் செய்கிறார். இவரது மகன் சதாம் உசேன். மனைவி, மருமகள் ஆகியோரை தினமும் சாகுல் அமீது ஆபாசமாக பேசி வந்துள்ளார். அவரை குடும்பத்தினர் கண்டித்தும் சாகுல்அமீது திருந்தவில்லை என தெரிகிறது.
வழக்கம்போல் நேற்றும் மனைவி, மருமகளை ஆபாசமாக பேசியதாக தெரிகிறது. இதனால் கோபம் அடைந்த சதாம்உசேன்,தந்தையை தட்டிக்கேட்ட போது வாக்குவாதம் முற்றியதால் தந்தையை சரமாரியாக தாக்கியுள்ளார். பின்னர் வீட்டில் இருந்த கத்தியை எடுத்துவந்து சாகுல் அமீதுவின் கழுத்தை அறுத்துள்ளார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த தாய், ‘’அப்பாவை விட்டுவிடு’’ என்று மகனிடம் கதறி அழுதுள்ளார். இருப்பினும் தந்தையின் கழுத்ைத அறுத்துக்கொண்டிருந்ததால் சாகுல் அமீது மனைவி வெளியே ஓடிவந்து அக்கம்பக்கத்தினரை உதவிக்கு அழைத்துள்ளார். இதையடுத்து ஆட்கள் வந்ததால் சதாம்உசேன் தப்பிவிட்டார்.

இதன்பிறகு ரத்தவெள்ளத்தில் விழுந்த சாகுல்அமீதை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அமைந்தகரை போலீசார் சென்று விசாரணை நடத்தி சதாம் உசேனை தேடி வந்தனர். இந்த நிலையில், தந்தையின் கழுத்தை அறுத்த கத்தியுடன் அமைந்தகரை காவல் நிலையத்தில் சதாம் உசேன் சரணடைந்தார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

அப்போது சதாம் உசேன் கூறுகையில், ‘’ எனது தந்தை தள்ளுவண்டியில் காய்கறி வியாபாரம் செய்கிறார். நான் கார் ஒட்டி வருகிறேன். தந்தை 10 ஆயிரம் கடன் வாங்கி அந்த பணத்தில் மது அருந்திவிட்டு தாய், என் மனைவியை ஆபாசமாக பேசினார். நான் பலமுறை கண்டித்து தந்தை திருந்தவில்லை. இதனால் ஏற்பட்ட கோபத்தில் தந்தையின் கழுத்தை அறுத்துவிட்டேன்’ என்றார். இதையடுத்து கொலை முயற்சி வழக்குபதிவு செய்து, சதாம் உசேனை கைது செய்து எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

Tags : Saran ,Nadalkarai , Son Charan cuts father's throat after talking obscenely to wife and mother with knife in police: Sensation in Suktakara
× RELATED ஜாமீன் மனு தள்ளுபடி திகார் சிறையில் டெல்லி மாஜி அமைச்சர் சரண்