×

பாஜகவுடன் மோதல் அதிகரித்துள்ள நிலையில் இந்தியாவின் மிகப்பெரிய ‘பப்பு’: அமித் ஷாவை சாடிய திரிணாமுல் எம்பி

கொல்கத்தா: இந்தியாவின் மிகப்பெரிய ‘பப்பு’ என்று குறிப்பிட்டு அமித் ஷா புகைப்படத்துடன் கூடிய பனியன் வாசகத்தை திரிணாமுல் எம்பி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மேற்குவங்க மாநிலத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் - பாஜக இடையே மோதல்கள் அதிகரித்துள்ளன. திரிணாமுல் கட்சியை சேர்ந்த எம்பி, எம்எல்ஏ உள்ளிட்ட நிர்வாகிகளுக்கு எதிராக மத்திய புலனாய்வு அமைப்புகள் பல வழக்குகளை தொடர்ந்துள்ளன.

அதனால் ஆளுங்கட்சிக்கும், ஒன்றிய பாஜக அரசுக்கும் மோதல்கள் அதிகரிப்பதால் மூத்த தலைவர்கள் மத்தியில் காரசார விவாதங்களும் தொடர்கின்றன. இந்நிலையில் திரிணாமுல் கட்சியின் ராஜ்யசபா எம்பிக்களின் வாட்ஸ்அப் குரூப்பில், அக்கட்சியின் எம்பி ஜோஹர் சர்க்கார் அவ்வப்போது ஒன்றிய அரசுக்கு எதிராகவும், தங்களது கட்சி நிர்வாகிகளுக்கு எதிராகவும் சர்ச்சைக்குரிய பதிவுகளை போட்டு வந்தார்.

அதனால் அந்த குழுவில் இருந்து வெளியேற்றப்பட்டார். இந்நிலையில் தனது டுவிட்டர் பக்கத்தில், ‘இந்தியாவின் மிகப்பெரிய ‘பப்பு’ யார் என்று கொல்கத்தா மக்களுக்குத் தெரியும். இந்தப் படம் கொல்கத்தாவில் வைரலாகிறது’ என்று பதிவிட்டு அமித் ஷா புகைப்படத்துடன் கூடிய பனியன் வாசகத்தை வெளியிட்டுள்ளார்.



Tags : India ,Trinamool ,Amit Shah ,Bajagu , India's Biggest 'Pappu': Trinamool MP Beats Amit Shah As Clash With BJP Grows
× RELATED மதுரையில் அமித்ஷா ரோடு ஷோவையொட்டி...