தி.மலை: கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் 151-வது பிறந்தநாளை ஒட்டி அவரது படத்துக்கு அமைச்சர்கள் மரியாதை செலுத்தினர். திருவண்ணாமலை நகராட்சி பெண்கள் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் வ.உ.சி. படத்துக்கு அமைச்சர் எ.வ.வேலு மற்றும் கோவை மத்திய சிறை வளாகத்தில் வ.உ.சியின் திருவுருவ படத்துக்கு அமைச்சர் செந்தில் பாலாஜியின் மலர்தூவி மரியாதை செய்தனர்.