×

திருவொற்றியூர் 13வது வார்டில் 50 தூய்மை பணியாளர்களுக்கு விருது: தி.மு.தனியரசு வழங்கினார்

திருவொற்றியூர்: சென்னை தினத்தை கொண்டாடும் வகையில், சென்னை மாநகராட்சி மண்டல பகுதிகளில் தூய்மைப் பணிகளை சிறப்பாக மேற்கொண்டு வரும் சமூக ஆர்வலர்கள், சுகாதார, தூய்மை பணியாளர்களை கவுரவிக்கும் வகையில், சென்னை மாநகராட்சி மேயர் பிரியா சார்பில் விருதுகள் மற்றும் சான்றிதழ் வழங்கப்படுகின்றன.

இந்நிலையில், திருவொற்றியூர் மண்டலத்துக்கு உட்பட்ட 13வது வார்டு பகுதிகளில் சிறப்பாக பணிகளை மேற்கொண்டு வரும் சுகாதார, தூய்மை பணியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களுக்கு நேற்று மாலை சாத்துமாநகர் பகுதியில் விருது வழங்கும் விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு கவுன்சிலர் சுசீலா ராஜா தலைமை தாங்கினார்.

இந்நிகழ்ச்சியில் மண்டல குழு தலைவர் தி.மு.தனியரசு பங்கேற்று, 50க்கும் மேற்பட்ட சுகாதார, தூய்மை பணியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களுக்கு சென்னை மாநகராட்சியின் விருதுகள் மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டினார். இதில் திமுக நிர்வாகி கேபிள் டிவி ராஜா, பிரசாத் மற்றும் மண்டல அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Tiruvottiyur 13th ,Government , Tiruvottiyur, 50 cleanliness workers were awarded by DM Private Government
× RELATED கர்நாடகாவுக்கு வறட்சி நிவாரணம்...