×

செம்பரம்பாக்கத்தில் ஏரியில் மூழ்கி பள்ளி மாணவன் பலி

குன்றத்தூர்: செம்பரம்பாக்கம் ஏரியில் நேற்று மாலை தனது நண்பர்களுடன் குளித்து கொண்டிருந்த பிளஸ் 2 படிக்கும் பள்ளி மாணவன் நீருக்குள் மூழ்கி பரிதாபமாக பலியானான். இப்புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். இதன் வீடியோ காட்சிகள் வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. சென்னை அருகே குன்றத்தூர், நாலு ரோடு ஜங்ஷன் பகுதியை சேர்ந்தவர் மோகன். தனியார் நிறுவன ஊழியர். இவரது மகன் ஜெகதீசன் (17). இவர், கோவூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்துள்ளார்.

இந்நிலையில், நேற்று மாலை அதே பகுதியை சேர்ந்த நண்பர்கள் சூர்யா, யுவராஜ் ஆகியோருடன் செம்பரம்பாக்கம் ஏரிக்கு ஜெகதீசன் சென்று சுற்றி பார்த்துள்ளார்.பின்னர் நீச்சல் தெரியாத ஜெகதீசன் கரையில் அமர்ந்து குளித்து கொண்டிருந்தார். ஏரியில் குளித்து கொண்டிருந்த நண்பர்கள் ஜெகதீசனை ஏரிக்குள் இறங்கி குளிக்கும்படி வற்புறுத்தினர். இதில் ஜெகதீசனுக்கு நீச்சல் தெரியாமல் ஆழமான பகுதிக்கு சென்றதால் நீருக்குள் மூழ்கத் துவங்கினார். அவரை நண்பர்களால் மீட்க முடியவில்லை.

இதுகுறித்து தகவலறிந்ததும் குன்றத்தூர் போலீசார் விரைந்து வந்தனர். பின்னர் பூந்தமல்லி தீயணைப்பு படையினர் வந்து, ஏரிக்குள் மூழ்கிய ஜெகதீசனின் சடலத்தை சுமார் ஒரு மணி நேரம் போராடி மீட்டனர். அச்சடலத்தை போலீசார் கைப்பற்றி, குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பான வீடியோ படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இப்புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Tags : Chembarambakkam , Sembarambakkam, drowning in lake, school student killed
× RELATED செம்பரம்பாக்கம் ஏரிக்கரையை...