×

துண்டு துண்டாக வெட்டி பிளாஸ்டிக் பையில் அடைத்து சாலையில் வீசினர், சினிமா தயாரிப்பாளர் கொடூர கொலை; விருகம்பாக்கத்தில் அதிர்ச்சி சம்பவம்

சென்னை: சென்னையில் சினிமா தயாரிப்பாளர் காரில் கடத்திச் சென்று கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். அவரது உடலை கைவேறு, கால் வேறு என்று துண்டு துண்டாக வெட்டி பிளாஸ்டிக் பையில் அடைத்து சாலை ஓரத்தில் வீசிய கொலைக்கார கும்பலை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர். சென்னை ஆதம்பாக்கம், ராமகிருஷ்ணபுரம் 3வது தெருவை சேர்ந்தவர் பாஸ்கரன் (67). இவரது மனைவி பாக்கியம்மாள். இவர்களுக்கு கார்த்திகேயன் (40). கவுசிக் (36) என்ற  இரண்டு மகன்கள் உள்ளனர். பாஸ்கரன், தற்போது சிமென்ட் கலவை இயந்திரம் உள்ளிட்ட கட்டுமான பொருட்களின் தரம் அறியும் அதிகாரியாக உள்ளார். பாஸ்கரன், நேற்று முன்தினம் மாலை 4 மணிக்கு தனது காரில் வெளியே புறப்பட்டார், மனைவியிடம், நாம் 6 மணிக்கு ஒரு திருமண நிகழ்ச்சிக்கு செல்ல வேண்டும் தயாராக இரு என்று கூறிவிட்டுச் சென்றுள்ளார். ஆனால் 6 மணிக்கு மேலாகியும் பாஸ்கரன் வரவில்லை. இதனால், பாக்கியம்மாள் அவரின் செல்போனில் பலமுறை தொடர்புகொண்டபோதும் எதிர்முனையில் எந்த பதிலும் இல்லை. இந்நிலையில் பாஸ்கரனின் மகன் கார்த்திகேயன் நேற்றுமுன்தினம் இரவு ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் தனது தந்தை காணவில்லை என்று புகார் கொடுத்துள்ளார். போலீசார் வழக்குப்பதிவு செய்து பாஸ்கரனை தேடினர். இந்நிலையில் நேற்று அதிகாலை விருகம்பாக்கம் சின்மயாநகர், உச்சிப்பிள்ளையார் கோயில் தெருவின் ஓரத்தில் கருப்பு பிளாஸ்டிக் பையில் அடைக்கப்பட்ட நிலையில் ஒரு உடல் இருப்பதாக பெண் தூய்மைப்பணியாளர்கள் போலீசருக்கு தகவல் கொடுத்தனர்.

போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, கட்டப்பட்டிருந்த பிளாஸ்டிக் பையை அவிழ்த்து பார்த்தனர். அப்போது, பையில், பிணத்தின் வாயில் துணியை அடைத்தும், முகம் சிதைக்கப்பட்டும், பல இடங்களில் வெட்டுக் காயங்களுடன், கைகால்கள் கட்டப்பட்ட நிலையில் இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். மேலும், உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். கொலை செய்யப்பட்டவர் ஆதம்பாக்கத்தில் காணாமல்போன பாஸ்கரன் என அவரது மகன் கார்த்திக் அடையாளம் காட்டினார். மேலும் விருகம்பாக்கம் பகுதியில் பாஸ்கரனின் கார் கண்ெடடுக்கப்பட்டது. இதனால் பாஸ்கரனை அந்தப் பகுதியில் உள்ள வீட்டில் அடைத்து வைத்து, பின்னர் கொலை செய்து, பிளாஸ்டிக் பையில் போட்டு கட்டி, காரில் தூக்கிக் கொண்டு வந்து சாலையில் வீசியிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். இதனால் கொலையாளிகளைப் பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. கொலையான பாஸ்கரன், 2014ம் ஆண்டுகளில் ஒயிட், சாம்ராட் என 2 படங்களை தயாரித்துள்ளார். இதற்காக ஒரு பைனான்ஸ் நிறுவனத்திடம் மந்தவெளி, மயிலாப்பூர் போன்ற பகுதிகளில் உள்ள சொத்துக்களை அடமானம் வைத்துள்ளார். இதில் ஒரு சொத்தை கடனுக்காக அவர்களுக்கே விற்றுள்ளார். மயிலாப்பூரில் உள்ள சொத்தை விற்க பவர் கொடுத்தை அறிந்த மகன்கள் நீதிமன்றம் சென்று அந்த சொத்தை மீட்டுள்ளனர். கொலை செய்யப்பட்ட அன்று பாஸ்கரனின் ஏடிஎம் கார்டு மூலம் 2 முறை தலா ரூ.10 ஆயிரம் பணம் எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பாஸ்கரை யார் கொலை செய்தார்கள்? எதற்காக கொலை செய்தார்கள்? என்று போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags : Virukambakkam , Cut into pieces and put in a plastic bag and thrown on the road, the filmmaker was brutally murdered; Shocking incident in Virukambakkam
× RELATED விருகம்பாக்கம் பாலலோக் சிபிஎஸ்இ...