×

சினிமான்னா தப்பு, ரைட்டு எல்லாமே இருக்கும்... மகளை சீரழித்தது பற்றி தாயிடமே பேசிய இயக்குநர்; பரபரப்பு ஆடியோ வைரல்

சேலம்: சினிமான்னா தப்பு, ரைட்டு எல்லாமே இருக்கும் என்று சேலத்தில் கைதான சினிமா இயக்குநர் இளம்பெண்ணின் தாயிடம் பேசிய ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் ஏவிஆர்  ரவுண்டானா பகுதியில் தனியார் கட்டிடத்தில் இயங்கி வந்த சினிமா கம்பெனியில்  வேலை பார்த்து வந்த இரும்பாலையை சேர்ந்த ஜனனி (32, பெயர் மாற்றம்), என்ற  பெண் சூரமங்கலம் மகளிர் காவல்நிலையத்தில் ஒரு புகார் கொடுத்தார். அதில்,  தான் வேலை பார்க்கும் சினிமா கம்பெனியின் இயக்குநரான இடைப்பாடி  வீரப்பன்பாளையத்தை சேர்ந்த வேல்சத்ரியன் (38), அவரது உதவியாளர்  ராஜபாளையத்தை சேர்ந்த ெஜயஜோதி (23) ஆகியோர் தனது செல்போனை பறித்து  வைத்துக்கொண்டு மிரட்டுவதாகவும், பல இளம்பெண்களை வைத்து ஆபாசமாக படம்  எடுத்து மிரட்டி சீரழிப்பதாகவும் கூறியிருந்தார். இதுபற்றி 5  பிரிவின் கீழ் வழக்குப்பதிந்த  போலீசார் விசாரித்தனர். தொடர்ந்து அந்த சினிமா கம்பெனிக்கு சென்று  விசாரித்ததில், இளம்பெண்களை வைத்து ஆபாசமாக படம் எடுத்து வருவது  தெரியவந்தது. ஜனனி புகாரின் பேரில் இயக்குநர் வேல்சத்ரியன், உதவியாளர்  ஜெயஜோதி ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் நடந்த விசாரணையில் பரபரப்பு  தகவல்கள் வெளியானது. அதில், புதிதாக ‘நோ’என்ற தலைப்
பில் சினிமா  எடுப்பதாக விளம்பரப்படுத்தி நடிகைகள் தேர்வு என இளம்பெண்களை வரவழைத்து,  பல்வேறு கோணங்களில் ஆபாசமாக இயக்குநர் வேல்சத்ரியன் படம்
எடுத்துள்ளார்.

ஆடை இல்லாமல் நிர்வாணப்படுத்தி வீடியோ எடுத்து மிரட்டி  சீரழித்திருக்கிறார். சேலம், கோவை, திருப்பூர், கள்ளக்குறிச்சி, சென்னை என  பல்வேறு பகுதிகளில் இருந்து வந்து இளம்பெண்கள் ஏமாந்துள்ளனர் என போலீஸ்  தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று இளம்பெண்  ஒருவரின் தாயாருடன் இயக்குநர் வேல்சத்ரியன் பேசும் ஆடியோ ஒன்று வெளியானது.  அதன் விவரம்.. இயக்குநர் வேல்சத்ரியன்: இது சினிமா மேடம்.. தப்போ ரைட்டோ எல்லாமே நடக்கத்தான் செய்யும், பிரச்னை மட்டும் வரக்கூடாது. தாய்: ஆமா ஆமா... இயக்குநர்: ‘‘நீங்க  ஒரு விஷயம் சொன்னீங்க, என் பொண்ணு அப்செட்டா இருக்கா.. என்ன பிரச்சன..  நீங்க என்ன பண்ணீனிங்கன்னு கேட்டீங்க.. கேட்டீங்களா இல்லையா...’’தாய்: ஆமா சார்.. இயக்குநர்: ‘‘பிராமிசா  சொல்றேன். எனக்கு கிடைச்ச டைமிங்கிற்கு எதாவது பண்னுனனா.  அந்த இடத்துல  ரெடி பண்ணத்தான் பாப்பேன். ......யை  எனக்கு ரெம்ப பிடிக்கும். அவளை ரெடி பண்ணணும்.’’ தாய்: ஆங் சரிங்க சார்.. இயக்குநர்: ‘‘நான் ரெடி பண்ணட்டா.. ஆர்ட்டிஸ்ட வச்சு ரெடி பண்ணட்டா...’’தாய்: ஆமா சார்... நீங்களே ரெடி பண்ணுங்க... இயக்குநர்: ........யை நான் டச் பண்ணுவேன், கிஸ் பண்ணுவேன். தொடுவேன்.. புடிப்பேன், எல்லாமே பண்ணுவேன். மத்தவங்க டச்சப் பண்ணிட்டு நாளைக்கு பிரச்னைனா..நான் பதில் சொல்ல முடியாது. தாய்: சரிங்க சார்.. சரிங்க சார்... இயக்குநர்: சரிங்களா, மேடம். நல்லா கேட்டுக்கோங்க.. அவளை ரெடி பண்ணணுமுனா எல்லாமே இருக்கும்.

தாய்: சரிங்க சார்.. சரிங்க சார்.. இயக்குநர்: ‘‘அம்மாகிட்ட ஒரு வார்த்தை கேட்டுக்கோங்க.. நீங்க என்ன வேணாலும் பண்ணுங்கனு சொன்னாள்.’’ இதுக்கு  முன்னாடி டச்சப், கிஸ் எல்லாமே பண்ணிட்டேன் மேடம். நான் இல்லேனு சொல்லல..  டச் பண்ணினேன். எல்லாமே பண்ணினேன். அவ ரெடியாத்தான் இருக்கா....பயம், கூச்சம் கொஞ்சம் இருக்கு.. இனிமே நீங்க தான் முடிவு பண்ணணும். தாய்: சரிங்க சார்.. ேவலையினு வந்தாச்சு. நீங்க ரெடி பண்ணிருங்க... உங்கள நம்பித்தான் நான் அங்க விட்டேன். இயக்குநர்: ஒரு விஷயம் கேளுங்க.. ஒரு பொண்ண டச்சப் பண்ணனும், கிஸ் பண்ணனுமுனா.. எல்லாமே இருக்கத்தான் செய்யும். ..........யை பொருத்தவரைக்கும் நான ஆரம்பத்துல இருந்தே தொட்டுத்தான் ரெடி பண்ணினேன்.தப்புன்னா அத அவ தான் முடிவு பண்ணனும். ஹீரோயின் மேடம் இவ.. தாய்: நான்  மொத்தத்துல உங்ககிட்ட ஒப்படைச்சுட்டேன். எல்லாத்துக்கும் ரெடி பண்ணி, அவள  பெரிய இடத்துல கொண்டு வந்துருங்க. எனக்கு அதுதான் முக்கியம். ஏன்னா நா  ரொம்ப கஷ்டப்பட்டு வந்தேன் சார்... உங்க இரண்டு பேரோட இருக்கட்டும்  சார்... இயக்குநர்:  நான் .........யை நான் லைக் பண்றேன். நானும் ........யும்  தனிமையாக இருந்திருக்கோம். தப்பு பண்றதுக்கான வாய்ப்பு கிடைச்சிருக்குமா  இல்லையா.. தப்பு பண்ணுனோமானு அவ கிட்ட கேளுங்க. அவள என் அத்த பொண்ணா தான்  நினைப்பேன். தப்பு தண்டா நடக்கும். தாய்:.   ஒரே வார்த்தையா சொல்லிட்டேன். நான் உங்கள நம்பி தான் கூட்டிட்டு   வந்தேன். நீங்க பாத்து ரெடி பண்ணி.. ஒரு பிரபலம் ஆக்கிருங்க... இயக்குநர்: அவ  ரொம்ப கூச்சப்படுறா..  ரெடி பண்றதுக்கான கூச்சம் போனுன்னா... அம்மா என்ன  பண்ணப் போறாங்க.  

அப்படிங்கிற ஒரு பயத்துல இருக்கிறா...நம்ம அம்மா தப்பா  நினைச்சுக்கிட கூடாதுனு ஒரு பீல் பண்றா. தாய்: நீங்க ரெடி பண்ணுங்க சார்.... இயக்குநர்: ரெடி பண்ணுவதில் எல்லாமே இருக்கும்.இன்னைக்கு காலையில் இருந்து. அதுக்காக இங்க பசங்கெல்லாம் உட்காந்து கிட்டு இருக்காங்க மேடம். தாய்: நாளைக்கு காலையில கண்டிப்பாக வர்றோம். இயக்குநர்: நான் தப்பான ஆள்இல்ல. ஆனால் எல்லாமே இருக்கலாம். தப்பு ரைட்டு எல்லாமே இருக்கும். அதைத்தான் உங்களிடம் கேட்டேன். ‘‘என்  ஒய்ப்பை பார்த்திருக்கீங்களா? கின்னுன்னு. வேற எனக்கு என்ன மேடம் வேணும்?  எனக்கு அடையணும் என்ற ஆசாபாசம் எல்லாம் கிடையாது. உங்க பேமிலியை எனக்கு  பிடிச்சிருக்கு அவ்வளவு தான்.’’தாய்: சரிங்க சார்... நானெல்லாம் ரொம்ப கஷ்டப்பட்டு வெளிய  வந்த குடும்பம். நாளைக்கு ஏதோ ஒண்ணுன்னா இன்னும் என்னை கேவலமா பேசுவாங்க. இயக்குநர்: மேடம் ஒரே விஷயம். நான் உங்களை எந்த விஷயத்திலும் விட்டுக் கொடுக்க மாட்டேன்.’’தாய்: சரிங்க சார். நீங்க பண்ணுங்க. அதுக்காகவே இவ்வளவு செலவு பண்ணியிருக்கேன். என்குடும்பம்  எவ்வளவு கஷ்டத்தில இருக்குன்னு உங்களுக்கு தெரியுமான்னு எனக்கு தெரியாது. என் வீட்டுக்காரரு, இப்போ என்கூட இல்ல. இயக்குநர்: ‘‘எனக்கு தெரியும் மேடம்...’’தாய்: இது  முதல்ல ரெடியாகட்டும் சார். அப்புறம் அடுத்த புராஜெக்டை அப்புறம்  பார்க்கலாம். வெளியவா போகப்போறோம் சார். நீங்க எப்பவும் உரிமையோட வரலாம்.  இவ்வாறு விவாதம் நடந்துள்ளது.

Tags : Cinemanna Tapu , In cinema, everything is wrong and right... The director spoke to his mother about the corruption of her daughter; The sensational audio went viral
× RELATED ஊட்டிக்கு டிரைவராக சென்றவர் பஸ்சில் சடலமாக திரும்பினார்