வாஷிங்டன்: அமெரிக்கா, மிஸ்ஸிசிபி மாகாணம் டுபேலோ நகரில் பிரபலமான வால்மார்ட் ஸ்டோர்ஸ் உள்ளது. இந்த கடையை விமானத்தை மோதி தகர்க்கப் போவதாக 29 வது வாலிபர் ஒருவர் நேற்று திடீரென மிரட்டல் விடுத்தார். மேலும், கடையின் மீது மோதுவதற்காக அவர் விமானத்தை வானத்தில் 3 மணி நேரத்துக்கும் மேலாக வட்டமிட்டார். இதைத் தொடர்ந்து, அவரை சமாதானப்படுத்துவதற்காக போலீசார் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அதே நேரம், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடையில் இருந்த வாடிக்கையாளர்கள், ஊழியர்கள் அவசர, அவசரமாக வெளியேற்றப்பட்டனர்.
மேலும், கடைக்கு அருகில் வசிப்பவர்களும் வெளியேற்றப்பட்டனர். விமானத்தில் பறந்தபடி சுற்றிய அந்த இளைஞர், விமானத்தை திருடிச் சென்று இருப்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. போலீசாரும், பேரிடர் மீட்பு படையை சேர்ந்த வீரர்களும் வால்மார்ட் அருகே முகாமிட்டு, தயார்நிலையில் உள்ளனர். விமானத்தை இயக்கிய இளைஞர் டுபேலோ மண்டல விமான நிலைய ஊழியர் என்பது தெரிய வந்துள்ளது.