×

மீண்டும் ஏற்றம் கண்ட நகை விலை.. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.56 உயர்வு!!

சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.56 உயர்ந்து, ரூ.37,776-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கடந்த சில மாதங்களாக ஏற்றம், இறக்கத்துடன் காணப்பட்டு வரும் நிலையில், ஒன்றிய அரசு தங்கத்திற்கான இறக்குமதி வரியை உயர்த்தியது. இதனால் தங்கத்தின் விலை தாறுமாறாக உயர்ந்து, விற்பனை செய்யப்பட்டது. எனினும், இம்மாத தொடக்கத்தில் நகை விலை குறைந்த விலையில் விற்பனை செய்யப்பட்டு வந்தாலும், அடுத்த சில நாட்களே குறைக்கப்பட்ட விலையை விட இருமடங்கு விலையேற்றம் அடைந்து விற்பனையானது.

இந்நிலையில் கடந்த மாதம் 25ம் தேதி வழக்கத்திற்கு மாறாக தங்க விலையானது, திடீர் உச்சம் அடைந்து, சவரன் ரூ.200 உயர்ந்து, ரூ.38,640-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதனால் மக்கள் நகை வாங்க பெரிதும் தயக்கம் காட்டினர். ஆனால் நேற்றைய தினம் தங்கத்தின் விலை மக்களை பெரிதும் கவரும் வகையில் சரிவுடன் விற்பனை செய்யப்பட்டது. அதாவது சவரன் ஒன்றுக்கு ரூ.120 குறைந்து, ரூ.37,560-க்கும், ஒரு கிராம் ரூ.15 குறைந்து, ரூ.4,695-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதனால் மக்கள் நகை வாங்க ஆர்வமுடன் முற்பட்டனர்.

ஆனால் இதற்கு நேர்மாறாக, இன்றைய தினம் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.56 உயர்ந்து ரூ.37,776 ஆக விற்பனையாகிறது. 22 கேரட் தங்கம் கிராமுக்கு ரூ.7 உயர்ந்து ரூ.4,722 ஆக விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளியின் விலை கிராமுக்கு 20 காசுகள் அதிகரித்து ரூ.58.20-க்கும், 1 கிலோ வெள்ளி ரூ.58,200-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதனால் நகை வாங்க மக்கள் பெரிதும் தயக்கம் காட்டி வருகின்றனர்.

Tags : Chennai , Chennai, Aparana Gold, Sawaran, High
× RELATED ஃபோர்டு நிறுவனம் சென்னையில் தனது...