பூந்தமல்லி: பூந்தமல்லியில் பள்ளி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். மாங்காடு அடுத்த மலையம்பாக்கத்தைச் சேர்ந்தவர் சூர்யா(21). இவர் மெட்ரோ ரயில்வே கட்டுமானத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இதற்கிடையில் சூர்யாவிற்கு, பூந்தமல்லியைச் சேர்ந்த 10ம் வகுப்பு படிக்கும் மாணவியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதன் பிறகு, இவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்துள்ளனர். இதையடுத்து, பெற்றோர் இல்லாத நேரத்தில் சூர்யா வீட்டிற்கு சென்று மாணவியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு சூர்யா அவரது வீட்டிற்கு மாணவியை அழைத்து சென்று விட்டார். இதுகுறித்து மாணவியின் பெற்றோர் பூந்தமல்லி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்தனர். இதையடுத்து, போலீசார் சூர்யா, மாணவி இருவரையும் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அதில், மாணவியை திருமண ஆசை காட்டி சூரியா பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. இதன் பிறகு, காவல் ஆய்வாளர் தனம்மாள் தலைமையில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து நேற்று சூர்யாவை கைது செய்தனர். மேலும், பெற்றோருடன் செல்ல மறுத்த மாணவியை மீட்டு கெல்லீசில் உள்ள அரசு காப்பகத்தில் சேர்த்தனர்.