சென்னை: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் புதிய தகவல்கள் தெரியவந்துள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது. கோடநாடு வழக்கில் மூடி மறைக்கப்பட்ட பல விபத்துகள் தெரியவந்துள்ளதாகவும், வழக்கு விசாரணைக்கு கால நிர்ணயம் செய்யக்கூடாது எனவும் காவல்துறை சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.