×

தமிழகத்தில் கோவை, நீலகிரியில் இன்று மிக பலத்த மழைக்கு வாய்ப்பு!: வானிலை மையம் எச்சரிக்கை..!!

சென்னை: தமிழகத்தில் கோவை, நீலகிரியில் இன்று மிக பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை மையம் தெரிவித்த செய்தியில், வட தமிழ்நாட்டில் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் கோவை, நீலகிரியில் இன்று பலத்த மழை பெய்யும். இன்று திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசியில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கிறது. மேலும், தமிழ்நாடு, புதுச்சேரியில் இன்று ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. நாளை நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், திருப்பூர் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.

செப்டம்பர் 4,5-ல் நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், கரூர் , நாமக்கல், திருப்பத்தூர், மதுரை, திருச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவித்தது. செப்டம்பர் 6ல் நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், கரூர், நாமக்கல், திருப்பத்தூர், தென்காசி, மதுரை, திருச்சி, வேலூர், ராணிப்பேட்டை, தி.மலை, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 19 மாவட்டங்களில் கனமழை பெய்யும். சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் மிதமான மழைக்கு வாய்ப்பிருக்கிறது.

மீனவர்களுக்கு எச்சரிக்கை:


செப்டம்பர் 2,3ல் வடகேரளா, லட்சத்தீவு, தென்கிழக்கு, மத்திய கிழக்கு அரபிக்கடல், கர்நாடக கரையோரம் பலத்த சூறாவளி வீசக்கூடும். செப்.5,6 தேதிகளில் குமரிக்கடல், மன்னார் வளைகுடா, தென்தமிழக கரையோரம், தென்மேற்கு வங்கக்கடலில் சூறாவளி வீச வாய்ப்புள்ளது. மணிக்கு 40 முதல் 60 கி.மீ. வேகத்தில் பலத்த சூறாவளி வீசவுள்ளதால் மீனவர்களுக்கு 5 நாட்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Tags : Govai ,Nilgiri ,Tamil Nadu , Tamil Nadu, Coimbatore, Nilgiris, heavy rain, Meteorological Center
× RELATED கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் 3...