சென்னை: சென் னை பல்கலைக்கழக பதிவாளராக பேராசிரியர் ஏழுமலை நியமிக்கப்பட்டுள்ளார். இவர், சென்னை பல்கலைக்கழகத்தின் உயிரித் தொழில் நுட்பத்துறை தலைவராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், சென்னை பல்கலைக் கழக பதிவாளர் பணியையும் அவர் கூடுதலாக கவனித்து வந்தார். இதையடுத்து, தற்போது சென்னை பல்கலைக்கழகத்தின் பதிவாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர், கடந்த 23ம் தேதி பதிவாளர் பொறுப்பை ஏற்றார்.