உடன்குடி: தூத்துக்குடி மாவட்டம், உடன்குடி தேரிக்குடியிருப்பு பகுதியில் உள்ள கற்குவேல் அய்யனார் கோயில் திருப்பணிகள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு துவங்கப்பட்டது. தற்போது பணிகள் நிறைவடைந்து கும்பாபிஷேக விழா, கடந்த ஆக.29ம் தேதி அதிகாலை 5 மணிக்கு மங்கள இசை மற்றும் மகா கணபதி பூஜையுடன் துவங்கியது. நேற்று அதிகாலை 5 மணிக்கு பூர்ணாகுதி, 4ம் கால யாகசாலை பூஜை, காலை 9 மணிக்கு யாகசாலை பூஜையில் இருந்து புனிதநீர் எடுத்துச் சென்று விமானம் மற்றும் மூலவர் பரிவார மூர்த்திகளுக்கு அஷ்டபந்தன கும்பாபிஷேகம் நடந்தது.
விழாவில் அமைச்சர் சேகர்பாபு, கலெக்டர் செந்தில்ராஜ் உட்பட பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து மகா அபிஷேகமும், மதியம் 1 மணிக்கு அலங்கார தீபாராதனை, மகேஸ்வர பூஜை நடந்தது. மாலை 6 மணிக்கு திருவிளக்கு பூஜை, மாலை 7 மணிக்கு மாவிளக்கு பூஜை, இரவு 8 மணிக்கு குதிரை வாகனத்தில் சுவாமி எழுந்தருளி பவனி வருதல் நடந்தது.