சென்னை: தமிழ்நாட்டில் 18 மாவட்டங்களில் இயல்பைவிட 100 சதவீதத்திற்கு அதிகமாக மழை பதிவாகி உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் தமிழ்நாடு, புதுச்சேரியில் தென்மேற்கு பருவமழை இயல்பைவிட 93 சதவிதம் கூடுதலாக பெய்துள்ளது. கடந்த 122 ஆண்டுகளில் தற்போது பெய்துள்ள மழை 3-வது அதிகபட்ச மழை பதிவாகும்.