அறந்தாங்கி : புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் அருகே உள்ள தெற்கு புதுக்குடி கிராமத்தில் அமைந்திருக்கும் விநாயகர் கோவில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு பாய்மரப்படகு போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த 20க்கும் மேற்பட்ட படகுகள் கலந்து கொண்டது.
இந்த போட்டியில் முதல் பரிசு ரூ.40 ஆயிரம், இரண்டாம் பரிசு ரூ.30 ஆயிரம், மூன்றாம் பரிசு ரூ.20 ஆயிரம். இந்த மூன்று பரிசையும் ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி புதுக்குடி படகுகள் தட்டி சென்றது. வெற்றி பெற்ற படகு உரிமையாளர்களுக்கு சுழல் கோப்பையும், ரொக்க பணமும் வழங்கப்பட்டது.
விழாவில் மணமேல்குடி ஒன்றிய குழு தலைவர் பரணி கார்த்திகேயன், பாஜக மாநில மகளிர் அணி பொதுச்செயலாளர் கவிதா ஸ்ரீகாந்த், கோட்டைப்பட்டினம் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் அக்பர் அலி உள்ளிட்ட கலந்து கொண்டனர். விழாவுக்கான ஏற்பாடுகளை தெற்கு புதுக்குடி கிராமத்தவர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.