திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அமராவதி அணைக்கு தொடர் நீர்வரத்து வந்துகொண்டிருப்பதால் நடப்பாண்டில் 8வது முறையாக நிரம்பியது. அணைக்கு வினாடிக்கு 3.500 கனஅடி நீர்வரத்து வந்து கொண்டிருக்கிறது. உபரி நீர் முழுவதும் அமராவதி ஆற்றில் திறந்து விடப்பட்டது. இதனால் அமராவதி ஆற்றங்கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.