டெல்லி: அரசியல் சாசன பிரிவு 161-ன் கீழ் ஆளுநரிடம் பதிவுகளை சமர்பிக்காமல், மாநில அரசுகளே கைதிகளை மன்னித்து, முன்கூட்டி விடுவிப்பது சாத்தியமா என்பது குறித்து விவாதிக்க, நீதிபதி இந்திரா பானர்ஜி தலைமையில் அரசியல் சாசன அமர்வை தலைமை நீதிபதி யு.யு.லலித் அமைத்தார். நீதிபதிகள் எம்.எம். சுந்தரரேஷ், சூரியகாந்தி, ஹேமந்த் குப்தா, சுதான்ஷு துலியா ஆகியோர் இந்த அமர்வில் இடம்பெற்றுள்ளனர்.