காரைக்குடி: காரைக்குடியில் இன்ஸ்டாகிராம் மூலம் பழகி 2 மாணவிகளை கூட்டு பலாத்காரம் செய்த சிறுவன் உள்பட 3 பேர் போக்சோவில் கைது செய்யப்பட்டனர். சிவகங்கை மாவட்டம், காரைக்குடியை சேர்ந்தவர் டிரைவர் விக்னேஷ் (19). இவருக்கும், காரைக்குடி அருகே ஒரு கிராமத்தை சேர்ந்த பிளஸ் 1 படிக்கும் 16 வயது சிறுமிக்கும் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. விக்னேஷின் நண்பர் கவியரசு (19) பாலிடெக்னிக் மூன்றாமாண்டு படித்து வருகிறார். விக்னேஷ், கவியரசு ஆகியோர், இன்ஸ்டாகிராமில் பழகிய 16 வயது சிறுமியை தனியாக வருமாறு அழைத்துள்ளனர்.
இதையடுத்து அந்த மாணவி, துணையாக நர்சிங் படிக்கும் 17 வயது மாணவியை அழைத்துக் கொண்டு விக்னேஷ், கவியரசு ஆகியோருடன் சென்றனர். காரில் 2 மாணவிகளையும் கடந்த சில நாட்களுக்கு முன் அழைத்துச் சென்றனர். இதற்கிடையே விக்னேஷ், கவியரசு ஆகியோர், தஞ்சாவூரிலுள்ள 16 வயது சிறுவனையும் வரவழைத்தனர். காரில் வைத்து 2 மாணவிகளையும் 3 பேரும் சேர்ந்து மூன்று நாட்கள் கூட்டு பலாத்காரம் செய்தனர்.
3 நாட்களுக்கு முன் வீடு திரும்பிய மாணவி நடந்த சம்பவத்தை பெற்றோரிடம் கூறியுள்ளார். இது குறித்து காரைக்குடி வடக்கு போலீசில் தாய் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிந்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த சிறுவன் உட்பட 3 பேரையும் போக்சோவில் நேற்று முன்தினம் இரவு கைது செய்தனர். இதில் 16 வயது சிறுவன், சிறுவர் கூர்நோக்கு இல்லத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டார். விக்னேஷ், கவியரசு ஆகியோர் சிறையில் அடைக்கப்பட்டனர்.