பல்லடம்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே காமநாயக்கன்பாளையம் அருகே உள்ள எம்.ஊத்துக்குளியில் தனியார் பேவர்பிளாக் தயாரிக்கும் நிறுவனத்தில் அசாம் மாநிலத்தை சேர்ந்த தொழிலாளி ஒருவர் தனது 21 வயதுடைய மனைவியுடன் கடந்த 15 நாட்களாக தங்கி வேலை செய்து வருகிறார். இத்தம்பதியினருக்கு திருமணம் ஆகி இரண்டு ஆண்டு ஆகிறது. கணவர் நேற்று முன்தினம் வேலைக்கு சென்று விட்டதால் வீட்டில் அவரது இளம் மனைவி மட்டும் தனியாக இருந்துள்ளார்.
இதனை அறிந்த அதே நிறுவனத்தில் வேலை செய்து வரும் அம்ருல் இஸ்லாம், (22), அனீப் அலி, (19), இப்ராஹிம் அலி( 27) ஆகியோர் வீட்டில் தனியாக இருந்த அப்பெண்ணை மூவரும் சேர்ந்து கூட்டு பலாத்காரம் செய்ய முயன்றனர். அப்பெண் சத்தம் போட்டுள்ளார். அக்கம் பக்கத்தில் தங்கியிருந்தவர்கள் ஓடி வந்ததால் மூவரும் தப்பி சென்று விட்டனர். பல்லடம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் பாலியல் தொல்லை கொடுத்த அசாம் மாநிலத்தை சேர்ந்த அம்ருல் இஸ்லாம், (22), அனீப் அலி, (19), இப்ராஹிம் அலி (27) ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.