×

யுகேஜி மாணவி பாலியல் வன்கொடுமை அரசு பள்ளி ஆசிரியர் சிறையில் அடைப்பு

சேத்துப்பட்டு: திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு அடுத்த கெங்கைசூடாமணி கிராமத்தில் செயல்பட்டு வரும் தனியார் மெட்ரிக்குலேஷன் பள்ளியில் யுகேஜி படிக்கும் 4 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக, பள்ளி தாளாளரின் கணவரும், உலகம்பட்டு அரசு உயர்நிலைப் பள்ளியில் பணிபுரிந்து வரும் ஆசிரியருமான காமராஜ் என்பவரை திருச்செந்தூர் அடுத்த எட்டையபுரம் பகுதியில் நேற்று முன்தினம் ேபாலீசார் கைது செய்து திருவண்ணாமலைக்கு அழைத்து வந்தனர்.

ஆசிரியர் காமராஜ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்த நிலையில், சஸ்பெண்ட் செய்யப்பட்டார். தொடர்ந்து, நேற்றும் 2வது நாளாக திருவண்ணாமலை மாவட்டம், போளூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கைதான காமராஜிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். மேலும், தனியார் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களிடம் விசாரணை நடந்தது. இதையடுத்து, கைதான ஆசிரியர் காமராஜை திருவண்ணாமலை  நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, நேற்று இரவு சிறையில் அடைத்தனர்.

Tags : UKG , Govt school teacher jailed for raping UKG student
× RELATED விவேகானந்தா மெட்ரிக் பள்ளியில் மழலையர் பட்டமளிப்பு விழா