சென்னை: அருவி படத்தின் மூலம் புகழ்பெற்றவர் அதிதி பாலன். அதன்பிறகு நிறைய சினிமா வாய்ப்புகள் வந்தும் நடிக்காமல் ஒதுங்கியே இருந்தார். 4 வருடங்களுக்கு பிறகு குட்டி ஸ்டோரி என்ற அந்தாலஜி படத்தில் ஒரு கதையில் நடித்தார். கோல்ட் கேஸ் என்ற மலையாள படத்தில் நடித்தார். தற்போது படவேட்டு என்ற தமிழ் படத்திலும், சாகுந்தலம் என்கிற தெலுங்கு படத்திலும், கோல்ட் கேஸ் 2வது பாகத்திலும் நடித்து வருகிறார். இந்நிலையில் அவர் தான் மண்பாண்டம் செய்ய கற்றுக் கொண்டதாகவும், இதனை தான் விரும்பி செய்வதாகவும் கூறியிருக்கிறார். இதுதொடர்பாக அவர் தனது இன்ஸ்டாகிராமில் எழுதியிருப்பதாவது:
நான் நீண்ட காலமாக மண்பாண்டங்கள் செய்வதை கற்க விரும்பினேன், இறுதியாக அதை நோக்கி எனது முதல் படியை எடுத்தேன். இது களிமண்ணை மையப்படுத்தும் கலை மட்டுமல்ல, மூச்சு, உடல் மற்றும் மனதையும் மையமாகக் கொண்டது. இது ஒரு அழகான செயல்முறை. நீண்ட அனுபவமும், ஆழ்ந்த மனநிலையும் கொண்டவர்களால் மட்டுமே இதனை உருவாக்க முடியும். இது உடலுக்கும், மனதிற்கும் அதிக உற்சாகத்தையும், விழிப்புணர்வையும் தருகிறது. ரஞ்சிதா என்கிற கலைஞர் மூலம் இதனை கற்றுக் கொண்டேன் என்கிறார் அதிதி பாலன்.