×

கேரள மார்க்சிஸ்ட் புதிய செயலாளர் கோவிந்தன்

திருவனந்தபுரம்: கேரள மாநில மார்க்சிஸ்ட் செயலாளராக கடந்த 2015ம் ஆண்டு கோடியேரி பாலகிருஷ்ணன் நியமிக்கப்பட்டார். இந்நிலையில், இவருக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டதை தொடர்ந்து பதவி விலக தீர்மானித்தார். இதையடுத்து, புதிய மாநில செயலாளரை தேர்வு செய்வதற்காக மாநில கமிட்டி கூட்டம் நேற்று திருவனந்தபுரத்தில் நடைபெற்றது. இதில் புதிய செயலாளராக உள்துறை அமைச்சரான கோவிந்தனை நியமிக்க முடிவு செய்யப்பட்டது.  ஏற்கனவே, இந்திய அரசியலமைப்பு சட்டம் குறித்து சர்ச்சை கருத்துக்களை தெரிவித்ததை தொடர்ந்து மீன்வளத்துறை அமைச்சர் சஜி செரியான் ராஜினாமா செய்ததால்  அமைச்சர்களின் பதவி காலியாக உள்ளது. இதனால், விரைவில் அமைச்சரவையில் மாற்றங்கள் ஏற்படலாம் என்று கூறப்படுகிறது. இந்நிலையில், சிகிச்சைக்காக கோடியேரி பாலகிருஷ்ணன் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட உள்ளார்.

Tags : Kerala ,Marxist ,Govindan , Kerala Marxist new secretary Govindan
× RELATED தன்னம்பிக்கையை அதிகரிக்கும் களரி பயட்டு