×

முக்கிய நபரை கொல்ல வீட்டில் தயாரித்த 7 நாட்டு வெடி குண்டுகள் பறிமுதல்: போலீசார் விசாரணை

சென்னை: காஞ்சிபுரம், மாண்டுகன்னீஸ்வரர் கோயில் தெருவைச் சேர்ந்தவர் தேவிகா. இவரின் வீட்டில் காஞ்சிபுரத்தை அடுத்த  குருவிமலை பகுதியை சேர்ந்த சிவசங்கரன் என்பவர் 2வது மாடியில் வாடகைக்கு இருக்கிறார். இவர் காஞ்சிபுரம் மாநகராட்சியில் கொசு ஒழிப்பு பணி ஒப்பந்தப் பணியாளராக வேலை செய்து வருகிறார், மேலும் குருவிமலை பகுதியில் பம்பை அடிக்கும் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் இவர் வீட்டில் கஞ்சா இருப்பதாக போலீசுக்கு தகவல் வந்ததன் பேரில் சிவகாஞ்சி காவல் காவல் துறையினர் தேவிகா வீட்டின் 2வது மாடிக்கு சென்று சிவசங்கரன் குடியிருக்கும் பகுதியில் சோதனை செய்தனர்.

இந்த சோதனையில் 1 கிலோ கஞ்சா, 7 நாட்டு வெடிகுண்டுகள் மற்றும் வெடிகுண்டுகள் தயாரிக்கு உதவும் கூழாங்கல் ,காகிதம், கயிறு, முட்டை, பூட்ஸ் ஆணிகள், பால்ஸ்கன் ஆகியவை  இருந்தன. உடனே, சிவகாஞ்சி காவல்துறையினர் 4 நாட்டு வெடிகுண்டுகளை பாதுகாப்பாக பறிமுதல் செய்தனர்.  சிவசங்கரனிடம் நடத்திய விசாரணையில், சென்னை வியாசர்பாடியைச்  சேர்ந்த புகழேந்தி என்பவர் இங்கு தங்கி இருந்து இந்த நாட்டு வெடிகுண்டுகளை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதை வைத்து ஆர்கே என்ற முக்கிய நபரை கொல்ல திட்டமிட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. எனவே புகழேந்தியை போலீசார் கைது செய்தனர். மேலும் இந்த வழக்கில் குற்றவாளிகளான விக்கி மற்றும் பிரேம் ஆகிய 2 பேர் தலைமறைவாகி உள்ளனர். இவர்களை பிடிக்கும் பணியில் போலீசார் தீவிரமாக உள்ளனர். 


Tags : 7 home-made explosives seized to kill prominent person: Police investigation
× RELATED பணம் கொடுத்து ஆட்களை அழைத்துச்சென்று...