×

வங்கதேசம் தப்பிய பெண் பலாத்காரம்: பிஎஸ்எப் வீரர்கள் கைது

கொல்கத்தா: மேற்கு வங்கத்தின் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள பாக்தா எல்லைப் புறக்காவல் நிலையத்திற்கு அருகில், நேற்று முன்தினம் இந்தியாவில் இருந்து சட்ட விரோதமாக வங்கதேசத்திற்குள் நுழைய முயன்ற ஒரு பெண்ணை எல்லை பாதுகாப்பு படை (பிஎஸ்எப்) போலீசார் கைது செய்தனர். பின்னர், அந்த பெண்ணை சிறப்பு எஸ்ஐ.யும், கான்ஸ்டபிளும் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்தனர். இது குறித்து அப்பெண் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில், பிஎஸ்எப் உதவி எஸ்ஐ, கான்ஸ்டபிளை நேற்று முன்தினம் இரவு போலீசார் கைது செய்தனர். இருவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். மேலும், 2 பேருக்கும் எதிராக ராணுவ நீதிமன்ற விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டு உள்ளது.

Tags : Bangladesh ,PSF , Bangladesh rape survivor, BSF soldiers arrested
× RELATED பங்களாதேஷ் நாட்டில் இருந்து...