×

5 நாளில் பல ஆண்களுடன் ‘ஆட்டம்’ ஒரே நேரத்தில் கொரோனா, குரங்கம்மை, எய்ட்ஸ் நோய்: இத்தாலி வாலிபருக்கு பயங்கரம்

ரோம்: இத்தாலியை சேர்ந்த வாலிபர் ஒரே நேரத்தில் கொரோனா, குரங்கம்மை, எச்ஐவி.யால் பாதித்துள்ளார். இத்தாலியை சேர்ந்த 36 வயது நபர், கடந்த ஜூன் மாதம் ஸ்பெயினுக்கு சுற்றுலா சென்றார். இங்கு 16 முதல் 20ம் தேதி வரை 5 நாட்கள் தங்கினார். அப்போது, பல ஆண்களுடன் பாதுகாப்பற்ற முறையில் ஒரினச்சேர்க்கையில் ஈடுபட்டார். பின்னர், நாடு திரும்பினார். இந்நிலையில், அவருக்கு பல்வேறு உடல்நிலை பாதிப்புகள் ஏற்பட்டன. அவருக்கு செய்யப்பட்ட மருத்துவ பரிசோதனையில், கடந்த  ஜூலை 2ம் தேதி கொரோனா தொற்று உறுதியானது.

ஜூலை 5-ம் தேதி அவருக்கு கைகளில் அரிப்பு, கொப்பளங்கள் ஏற்பட்டன. கடானியாவில் உள்ள சான் மார்கோ பல்கலைக் கழக மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்ததில், குரங்கம்மை உறுதியானது. பிறகு, இடைவிடாத காய்ச்சல் போன்ற அறிகுறிகள் தென்பட்டன. அதற்கும் பரிசோதனைகள் செய்யப்பட்டதில், எச்ஐவி. தொற்று ஏற்பட்டு இருப்பது உறுதியானது. கடைசியாக, கடந்தாண்டு செப்டம்பரில் அவர் எச்ஐவி பரிசோதனை செய்ததில் நெகட்டிவ் என வந்துள்ளது. தொடர் சிகிச்சைக்கு பிறகு கொரோனா, குரங்கம்மை நோயில் இருந்து அவர் குணமாகி விட்டார். ஆனால், எச்ஐவி அவரை துரத்துகிறது.



Tags : 'Game' with many men in 5 days at the same time Corona, monkeypox, AIDS: horror for Italian teenager
× RELATED இந்தோனேஷியாவில் பலமுறை வெடித்து சிதறிய எரிமலை