×

ஓபிஎஸ்சுக்கு முதல்வராகும் வெறி பிடித்துள்ளது எம்ஜிஆர், ஜெயலலிதா போன்று எடப்பாடியால் செயல்பட முடியாது: மாஜி அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் பேச்சு

கொடைக்கானல்: எம்ஜிஆர், ஜெயலலிதா போன்று எடப்பாடியால் செயல்பட முடியாது என முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் பேசினார். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மேல்மலை ஒன்றிய அதிமுக செயல்வீரர்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் எம்எல்ஏ பேசியதாவது: நாம் இயக்க தலைமைக்கு விசுவாசமாக இருக்க வேண்டும். எம்ஜிஆர், ஜெயலலிதாவுக்காகத்தான் நாம் கட்சிக்கு வந்தோம். தற்போது எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்றுள்ளார். எம்ஜிஆர், ஜெயலலிதா போன்று அவர் செயல்பட முடியாது. தனிப்பட்ட முறையில் ஓபிஎஸ்சை நான் மதிக்கிறேன். ஓபிஎஸ்க்கு ஏன் பிரச்னை வந்தது என்றால், அவர் தான் முதல்வர் ஆக வேண்டும் என்ற எண்ணத்தில் வெறி பிடித்தது போல உள்ளார். கட்சியையும் காட்டி கொடுத்து விட்டார். ஓபிஎஸ் துரோகி. சட்டப்படி இபிஎஸ் பொதுச்செயலாளர் ஆவார். இபிஎஸ் அணியில் உள்ள யாரையும் ஓபிஎஸ் அணிக்கு போக விடாதீர்கள். இவ்வாறு பேசினார்.

* ஒன்றரை கோடியா? ஒன்றரை லட்சமா?
கூட்டத்தில் நத்தம் விஸ்வநாதன் பேசும் போது, ‘‘ஒன்றரை லட்சம் தொண்டர்கள் என்ன இளிச்சவாயர்களா’’ என கேட்டார். தமிழகத்தில் ஒன்றரை கோடி தொண்டர்கள் தன் பக்கம் உள்ளதாக எடப்பாடி அடிக்கடி கூறி வரும் நிலையில் தற்போது நத்தம் விஸ்வநாதன் இவ்வாறு கூறியதால் தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

Tags : OPS ,Chief Minister ,Edappadi ,MGR ,Jayalalitha ,Former minister ,Natham Viswanathan , OPS is obsessed with Chief Minister Edappadi can't act like MGR, Jayalalitha: Former Minister Natham Viswanathan
× RELATED ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பன்னீர்...