×

முதியோர்களுக்கான ஆலோசனை குழுவிற்கு அலுவல் சாரா உறுப்பினர்கள் நியமனம்

காஞ்சிபுரம்:  காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கை: சமூக நல இயக்குநரின் கடிதத்தின்படி ஒன்றிய அரசின் மூத்த குடிமக்கள் பெற்றோர் பராமரிப்பு சட்டம் 2007, பிரிவு 32ன்படி தமிழ்நாடு மூத்த குடிமக்கள் பெற்றோர் பராமரிப்பு மற்றும் நலவிதிகள் வகுக்கப்பட்டு 31.12.2009 அன்று அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.விதிமுறைகளின்படி அலுவல் சாரா உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டனர். அலுவல் சாரா உறுப்பினர்களின் பதவிகாலம் 3 வருடம் கடந்த நிலையில் அலுவல் சாரா உறுப்பினர்களை தேர்வு செய்யுமாறு  கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

மாநில அளவிலான முதியோர்களுக்கான உயர்நிலை ஆலோசனை குழுவிற்கு அலுவல் சாரா உறுப்பினர்களை, முதியோர் நல மேம்பாட்டு பணிகளில் குறைந்தபட்சம் 3 வருட அனுபவமும் முழு ஈடுபாடும் உள்ள 45 வயதிற்கு மேற்பட்ட நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் 25.08.2022 அன்று மாலை 05.45 மணிக்குள்  வரவேற்கப்படுகின்றன. மேலும், விவரங்களுக்கு மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலக பழைய கட்டிடம், முதல் தளம், மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் இயங்கி வரும் மாவட்ட சமூகநல அலுவலகத்தை (தொலைபேசி எண்.044-27239334) அணுகவும்.

Tags : Advisory Committee on Senior Citizens , Appointment of ex-officio members to the Advisory Committee on Senior Citizens
× RELATED முதியோர்களுக்கான ஆலோசனை குழுவிற்கு அலுவல் சாரா உறுப்பினர்கள் நியமனம்