×

விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தை செயல்படுத்த கோரி உண்ணாவிரதம்: அதிமுக சார்பில் இன்று நடக்கிறது

சென்னை: சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:
விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்ட மக்களின் குடிநீர் பிரச்னையை தீர்க்க கடல் நீரை குடிநீராக்கி வழங்கும்  ரூ.1502.72 கோடி மதிப்பீட்டிலான திட்டத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டப்பட்டு, ஆரம்ப கட்ட பணிகள் துவக்கப்பட்டன. ஆட்சி மாற்றத்திற்கு பிறகு இத்திட்டத்தை அரசு கைவிட்டுள்ளது. இந்த திட்டத்துக்கு தேவையான நிதியை விடுவிக்க வலியுறுத்தி, விழுப்புரம் மாவட்ட அதிமுக சார்பில், முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தலைமையில் இன்று காலை 9 மணி முதல் திண்டிவனம் காந்தி சிலை அருகில் உண்ணாவிரத போராட்டம் நடைபெறும்.

Tags : Villupuram ,Kallakurichi district ,AIADMK , Project to make sea water drinkable, on behalf of AIADMK Happening today
× RELATED விழுப்புரம்-திருப்பதி ரயில் பகுதி ரத்து தெற்கு ரயில்வே அறிவிப்பு