×

வானகரத்தில் நாளை பகுஜன் சமாஜ் இளைஞரணி மாநாடு

சென்னை: பகுஜன் சமாஜ் கட்சி சார்பில், சமூக பொருளாதாரம், சமத்துவத்தை ஏற்படுத்த “ஜெய்பீம் மாடலை உருவாக்கலாம் வாருங்கள்” என்ற தலைப்பில் நாளை வானகரம் ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி பேலஸ் திருமண மண்டபத்தில்  சென்னை மண்டல இளைஞரணி  மாநாடு நடைபெறுகிறது.

மாநாட்டுக்கான ஏற்பாடுகளை அக்கட்சி மாநில தலைவர் கே.ஆம்ஸ்ட்ராங், தென்னிந்திய ஒருங்கிணைப்பாளரும் எம்பியுமான அசோக் சித்தார்த் மற்றும் தென்னிந்திய ஒருங்கிணைப்பாளர் நித்தின்சிங் ஆகியோர் செய்து வருகின்றனர். தேசிய ஒருங்கிணைப்பாளர் ஆகாஷ் ஆனந்த், மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொள்வதால், பல்லாயிரக்கணக்கான பகுஜன் சமாஜ் தொண்டர் கலந்துகொள்ளவேண்டும் என நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மாநில ஒருங்கிணைப்பாளர் மைக்கேல்தாஸ்,  மாவட்ட தலைவர்கள் எஸ்.அப்பாஸ், எம்.சத்தியமூர்த்தி, டிவி சுரேஷ், கே.பிரவீன், எஸ்.இளையராஜா, கே.பிரபாகரன், எம்.பிரேம் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

Tags : Bahujan Samaj youth conference ,Vanagaram , Bahujan Samaj youth conference tomorrow at Vanagaram
× RELATED மதுரவாயல் அருகே வழிப்பறியில் ஈடுபட்ட 3...