சென்னை: நடிகர் விஷாலின் சொத்து விவரங்களை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. லைகா நிறுவனத்திற்கு செலுத்த வேண்டிய ரூ.21 கோடி கடனை செலுத்தாதது தொடர்பான வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பைனான்சியர் அன்புச்செழியனிடம் ரூ.21.29 கோடி விஷால் பெற்ற கடனை செலுத்த முடியாததால், லைகா நிறுவனம் செலுத்தியது. கடனை செலுத்தாமல் வீரமே விசாகை சூடும் படம் வெளியிட தடைகோரி லைகா தொடர்ந்த வழக்கில் ரூ.15 கோடி செலுத்த ஆணையிடப்பட்டுள்ளது.