×

மாமூல் வாங்குவதில் முன் விரோதம் பிரபல ரவுடி சரமாரியாக வெட்டி படுகொலை; 2 பேர் கைது 4 பேருக்கு வலை

செங்கல்பட்டு:மாமூல் வாங்குவதில் ஏற்பட்ட முன் விரோதம் காரணமாக, பிரபல ரவுடி சரமாரியாக வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக, வழக்கு பதிவு செய்த போலீசார் 2 பேர் கைது செய்தனர். மேலும், 4 பேரை வலைவீசி தேடி வருகின்றனர். காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் அடுத்த எருமையூர் பகுதியை சேர்ந்தவர் பிரகாஷ் (25), இவர் மீது கொலை வழக்கு உள்ளது. இந்நிலையில், தனது மகனை காணவில்லை என அவரது பெற்றோர் மறைமலைநகர் காவல் நிலையத்தில் கடந்த மே மாதம் புகார் அளித்தனர். இதுகுறித்து, போலீசார் விசாரணை நடத்தியபோது பிரகாஷுக்கும், திருமுடிவாக்கத்தைச் சேர்ந்த கருப்பு (எ) தமிழ் அழகனுக்கும் முன்விரோதம் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, கருப்புவின் தம்பி, தமிழ்மணியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். அதில் திருமுடிவாக்கம், எருமையூர் உள்ளிட்ட பகுகளில் உள்ள டீக்கடை மற்றும் ஹோட்டல்களில் மாமூல் வாங்குவதில் பிரகாசுக்கும், கருப்பு (எ) தமிழ் அழகனுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு வந்தது.

இந்த நிலையில் கஞ்சா போதைக்கு அடிமையான பிரகாஷ் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து கருப்பு (எ) தமிழ் அழகனை தீர்த்துகட்ட முடிவு செய்துள்ளார். இதனை அறிந்த கருப்பு தனது கூட்டாளிகளுடன் மறைமலை நகரில் தனது உறவினர் வீட்டில் இருந்த பிரகாஷை கடந்த ஆண்டு நவம்பர் மாதம் கடத்தி சென்று மண்ணிவாக்கம் பகுதியில் வைத்து சரமாரியாக வெட்டி, உடலை கோணிப்பையில் மூட்டை கட்டி திருமுடிவாக்கம் பகுதியில் உள்ள கிணற்றில் வீசி விட்டு சென்றது தெரியவந்தது. இது குறித்து வழக்கு பதிவு செய்த மறைமலைநகர் போலீசார் தமிழ் மணி (23) மற்றும் மோசஸ் (20) ஆகியோரை கைது செய்து செங்கல்பட்டு குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும், முக்கிய குற்றவாளியான கருப்பு என்கிற தமிழ் அழகன்  உள்பட நான்கு பேரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Tags : A famous raider was hacked to death by a barrage of enmity before buying Mamul; 2 arrested, 4 arrested
× RELATED எரிந்த நிலையில் பெண் சடலம்: கொலையா என விசாரணை