×

பில்கிஸ் பானுக்கு நீதி வழங்குங்கள்: ராகுல், பிரியங்கா ஆவேசம்

புதுடெல்லி: ‘பெண் குழந்தைகளை பாதுகாப்போம் என்று முழக்கமிடுபவர்கள்தான் பாலியல் பலாத்காரம் செய்த குற்றவாளிகளை காப்பாற்றுகிறார்கள்,’ என்று ராகுல் காந்தி  குற்றம்சாட்டி உள்ளார். குஜராத்தில் நடந்த கோத்ரா ரயில் எரிப்பு கலவரத்தின் போது, பில்கிஸ் பானு என்ற பெண் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, அவருடைய குடும்பத்தை சேர்ந்த 7 பேர் கொல்லப்பட்டனர். இந்த வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற 11 பேர், சுதந்திர தினத்தன்று குஜராத் அரசால் பொது மன்னிப்பு வழங்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டனர். நாடு முழுவதும் இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

இந்நிலையில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நேற்று வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ‘பெண் குழந்தைகளை பாதுகாப்போம் என்று வெற்று முழக்கமிடுபவர்கள்தான், பாலியல் பலாத்காரம் செய்தவர்களை பாதுகாக்கிறார்கள். நாட்டின் பெண்களுக்கான மரியாதை, உரிமைகள் பற்றி கேள்விகள் எழுந்துள்ளது. பில்கிஸ் பானுவுக்கு நீதி வழங்குங்கள்,’ என்று கூறியுள்ளார். பிரியங்கா காந்தி வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ‘நாட்டின் கடைகோடியில் நிற்கும் பெண்ணுக்கும் நீதிக்காக போராடும் தைரியத்தை அரசியல் சட்டம் வழங்குகிறது. பில்கிஸ் பானுவுக்கு நீதி வழங்குங்கள்,’ என்று கூறியுள்ளார்.

Tags : Rahul ,Priyanka , Justice for Bilgis Baan: Rahul, Priyanka obsessed
× RELATED வயநாட்டில் கம்பளகாடு பகுதியில் பிரியங்கா காந்தி ரோடு ஷோ..!!