×

கனல் கண்ணன் ஜாமீன் மனு தள்ளுபடி

சென்னை: ஸ்டன்ட் மாஸ்டர் கனல் கண்ணன் ஜாமீன் மனுவை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. இந்து முன்னணி கூட்டத்தில் பேசிய இந்து முன்னணி அமைப்பின் கலை இலக்கிய மாநில தலைவரும், சினிமா ஸ்டன்ட் மாஸ்டருமான கனல் கண்ணன் ஸ்ரீரங்க கோயில் வாசலில் உள்ள பெரியார் சிலையை உடைத்து அகற்றுகின்ற நாள் தான் இந்துக்களின் எழுச்சி நாள் என்று பேசியது சர்ச்சைக்குள்ளானது.

இவர் மீது சென்னை காவல்துறையில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் புகார் அளித்து. கனல் கண்ணனை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் ஜாமீன்கேட்டு சென்னை முதன்மை குற்றவியல் நீதிமன்றத்தில் கனல் கண்ணன் மனு தாக்கல் செய்தார். வழக்கை விசாரித்த நீதிபதி அல்லி, கனல் கண்ணனின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Tags : Kannan , Kanal Kannan, Bail Petition,
× RELATED நானும் இன்ட்ரோவர்ட்தான் நிஜம் என்ன?