×

அதிமுக தலைமை அலுவலகத்தில் நடந்த வன்முறை தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம், வைத்தியலிங்கம் மீது வழக்குப்பதிவு.!

சென்னை: அதிமுக தலைமை அலுவலகத்தில் நடந்த வன்முறை தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஓ.பன்னீர்செல்வம், வைத்தியலிங்கம், மனோஜ்பாண்டியன் உள்ளிட்டோர் மீது 7 பிரிவுகளில் முதல் தகவல் அறிக்கை பதியப்பட்டுள்ளது. கடந்த மாதம் 11 ஆம் தேதி அதிமுக தலைமை அலுவலகத்தில் ஓபிஎஸ்- ஈபிஎஸ் ஆதரவாளர்கள் இடையே மோதல் ஏற்பட்டது.

இந்த மோதலின் போது அதிமுக தலைமை அலுவலகத்தில் இருந்து முக்கிய ஆவணங்களை ஓ பன்னீர் செல்வம் ஆதரவாளர்கள் திருடிச்சென்றதாக சிவி சண்முகம் தரப்பில் ராயப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில், சிவி சண்முகம் அளித்த புகாரின் அடிப்படையில் ஓ பன்னீர் செல்வம், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோர் மீது ராயப்பேட்டை காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Tags : O. Panneerselvam ,Vaithialingam ,AIADMK , A case has been registered against O. Panneerselvam and Vaithialingam in connection with the violence in the AIADMK head office.
× RELATED ஜூன் 4ம் தேதிக்கு பின் அதிமுக, இரட்டை...