கோவை: தோள் கொடுப்போம் தொழில்களுக்கு என்ற திருப்பூர் மண்டல மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றுள்ளார். மாநாட்டில் கோவையில் நிறுவப்பட்டுள்ள கயிறு வணிக மேம்பாட்டு நிறுவனத்தை திறந்து வைத்தார். ரூ.100 கோடிக்கு தமிழ்நாடு கடன் உத்தரவாத திட்டம், வர்த்தகம் வரவுகள் தள்ளுபடி தளத்தையும் அவர் தொடங்கி வைத்தார்.