சென்னை: கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் 2வது அணுஉலையும் தொழில்நுட்ப கோளாறு காரணமாக உற்பத்தி நிறுத்தப்பட்டது. கல்பாக்கத்தில் உள்ள சென்னை அணுமின் நிலையத்தில் 220 மெகாவாட் திறன் கொண்ட 2 அணு உலைகள் உள்ளது. இந்த 2 அணு உலைகளிலும் 440 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. 2018ம் ஆண்டு தொழில்நுட்ப கோளாறு காரணமாக முதலாவது அணு உலை நிறுத்தப்பட்டது.
இன்று வரை அது சரி செய்யப்படாத நிலையில் மத்திய தொகுப்பிற்கு கிடைக்கப்பெற வேண்டிய 220 மெகாவாட் மின்சாரம் பாதிக்கப்பட்டது. எனவே, அப்போதிலிருந்தே 2வது அணுஉலை மட்டுமே இயங்கி வந்தது. இந்நிலையில் இந்த 2வது அணு உலையும் தொழில் நுட்ப கோளாறு காரணமாக உற்பத்தி நேற்று நிறுத்தப்பட்டது.