புதுடெல்லி: கடந்த சில ஆண்டுகளாக பாதுகாப்பு முகமைகள் கடுமையான கட்டுப்பாடுகள் காரணமாக உபா சட்டத்தின் கீழ் அதிக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கடந்த 2014ம் ஆண்டு முதல் 2020ம் ஆண்டு வரையிலான கால கட்டத்தில் மொத்தம் 6900 வழக்குகள் உபா சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது. 399 தேசதுரோக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 2018ம் ஆண்டு முதல் 2020ம் ஆண்டில் மொத்தம் 4690 பேர் உபா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டள்ளனர்.