×

குறுகிய தூரம் பயணிப்பவர்களுக்கு புது வசதி: அனந்தபுரி, மைசூர் ரயில்களில் ‘டி-ரிசர்வ்டு’ பெட்டி அறிமுகம்

மதுரை: ரயில் முன்பதிவு பெட்டிகளில் முன்பதிவு பயணச்சீட்டு வைத்திருக்கும் பயணிகள் மட்டுமே பயணிக்க முடியும். குறுகிய தூரம் பயணம் செய்யும் பயணிகளின் வசதிக்காக சில ரயில்களின் முன்பதிவு பெட்டிகள் ‘டி-ரிசர்வ்டு’ பெட்டிகளாக மாற்றம் செய்யப்படுகிறது. அதன்படி, சென்னை எழும்பூர் - கொல்லம் அனந்தபுரி ரயிலில் அக். 19 முதல் எஸ் 10 மற்றும் எஸ் 11 ஆகிய முன்பதிவு பெட்டிகள் திருநெல்வேலி - கொல்லம் இடையேயும், கொல்லம் - சென்னை எழும்பூர் அனந்தபுரி ரயிலில் அக். 20 முதல் எஸ் 11 பெட்டி கொல்லம் - திருநெல்வேலி இடையேயும் டி-ரிசர்வ்டு பெட்டிகளாக இயக்கப்படும்.

தஞ்சாவூர், கும்பகோணம் வழியாக இயக்கப்படும் சென்னை எழும்பூர் - ராமேஸ்வரம் - சென்னை எழும்பூர் ரயில்களில் எஸ் 12, எஸ் 13 ஆகிய பெட்டிகள் அக். 24 முதல் மானாமதுரை - ராமேஸ்வரம் இடையேயும், அக். 26 முதல் ராமேஸ்வரம் - மானாமதுரை இடையேயும் டி-ரிசர்வ்டு பெட்டிகளாக இயக்கப்படும். அதேபோல தூத்துக்குடி - மைசூர் ரயிலில் அக். 28 முதல் எஸ் 10 மற்றும் எஸ் 11 ஆகிய முன்பதிவு பெட்டிகள் டி-ரிசர்வ்டு பெட்டிகளாக இயக்கப்படும்.

இந்த டி-ரிசர்வ்டு ரயில் பெட்டிகளில் பயணம் செய்ய புதிய சிறப்பு கட்டணம் செலுத்த வேண்டும். உதாரணமாக தூத்துக்குடி - மதுரை இடையே ரயிலில் பயணம் செய்ய முன்பதிவற்ற கட்டணம் ரூ.70, முன்பதிவு கட்டணம் ரூ.145, டி-ரிசர்வ்டு கட்டணம் ரூ.110 என வரையறுக்கப்பட்டுள்ளது. இந்தப் பெட்டிகளில் பயணம் செய்ய, டிக்கெட் கவுன்ட்டர்களில் ‘டி-ரிசர்ட்டு டிக்கெட்’ என கேட்டுப் பெறவேண்டும். இத்தகவல் தெற்கு ரயில்வே செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Anantapura ,Mysore , New facility for short-distance commuters: Introduction of 'T-reserved' coach in Ananthapuri, Mysore trains
× RELATED நம் நாட்டின் பன்முகத்தன்மை குறித்து...