×

சாகித்ய அகாடமி வழங்கும் இளம் எழுத்தாளர்களுக்கான யுவ புரஸ்கார் விருது எழுத்தாளர் காளிமுத்து, எழுத்தாளர் ஜி.மீனாட்சிக்கு அறிவிப்பு

சென்னை: சாகித்ய அகாடமி வழங்கும் இளம் எழுத்தாளர்களுக்கான யுவ புரஸ்கார் விருது எழுத்தாளர் காளிமுத்துவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. 22 பிராந்திய மொழி படைப்புகளுக்கு வழங்கப்படும் யுவ புரஸ்கார் விருதை தமிழ் எழுத்தாளர் காளிமுத்து பெறுகிறார். தனித்திருக்கும் அரளிகளின் மதியம் என்ற கவிதை தொகுப்புக்கு இந்தாண்டுக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது. சாகித்ய அகாடமி வழங்கும் சிறுகதைக்கான பால சாகித்ய புரஸ்கார் விருது தமிழில் மல்லிகாவின் விடு என்ற சிறுகதைக்காக எழுத்தாளர் ஜி.மீனாட்சிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.


Tags : Sahitya Akademi ,Kalimuthu ,G. Meenakshi , Yuva Puraskar Award for Young Writers by Sahitya Akademi Announced to Writer Kalimuthu, Writer G. Meenakshi
× RELATED சிறந்த தமிழ் பொழிபெயர்ப்பு: கண்ணையன்...