சென்னை: தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தில் காலி இடங்களை நிரப்பக் கோரிய வழக்கில் ஒன்றிய அரசுக்கு ஐகோர்ட் நோட்டிஸ் அனுப்பியுள்ளது. ஓ.பி.சி.ஆணையத்தில் காலியாக உள்ள தலைவர் துணை தலைவர் உறுப்பினர் பதவிகளை நிரப்பக்கோரி வழக்கு தொடர்ந்துள்ளனர். பாமக வழக்கறிஞர் பாலு தாக்கல் செய்த மனு மீது ஒன்றிய அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் நோட்டிஸ் அனுப்பியுள்ளது.